துபாயில் "செய்யாத குற்றத்திற்காக" பிரித்தானிய கால்பந்து பயிற்சியாளருக்கு 25 ஆண்டுகள் சிறை! விடுவிக்க போராடும் குடும்பத்தினர்
துபாயில் காரில் கஞ்சா எண்ணெயை வைத்திருந்த குற்றத்திற்காக 24 வயது பிரித்தானிய கால்பந்து பயிற்சியாளருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மேற்கு லண்டன் பகுதியில், கென்சிங்டனில் உள்ள Notting Hill பகுதியை சேர்ந்தவர் Billy Hood, வயது 24.
Kensington & Ealing Borough கால்பந்து கிளுப்பிற்காக விளையாடிய பிரித்தானிய இளம் கால்பந்து வீரரான இவர், கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டு பயிற்சி கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 31-ஆம் திகதி, துபாயில் அவர் தனது நண்பருடன் தங்கியிருந்து குடியிருப்பில் திடீரென 'Taser' துப்பாக்கி முனையில் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதற்கு சில வாரங்களுக்கு முன், பில்லியன் காரில் போதைக்காக ஈ-சிகரெட் மூலம் புகைக்க பயன்படுத்தப்படும் சிறிய கஞ்சா எண்ணெய் போத்தல்கள் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பிறகு, சில ஓரிரு வாரங்களாக அவரையும், அவரது தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் மெஸேஜ்களை கண்காணித்த்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் பில்லியை சந்தித்த நண்பர் ஒருவரிடமிருந்து, "உன்னுடைய காரில் சில எண்ணெய் போத்தல்களை விட்டுவிட்டு வந்துவிட்டேன்" என வாட்ஸ்அப் மெஸேஜ் வந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக பில்லியை அவரது குடியிருப்பில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் பிறகு நடந்ததாக பில்லியின் தரப்பில் கூறப்பட்டதாவது: எனக்கும் அதே எண்ணெய் குப்பிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது என்னவென்று கூட எனக்கு தெரியாது. எனக்கு எந்த வித புகைப்பழக்கமும் இல்லை.
நான் சிறு பிள்ளைகளுக்கு கால்வந்து பயிற்சி கொடுப்பவன், எனக்கு மிகப்பெரிய கால்பந்து பயிற்சியாளராக ஆசை உள்ளது, அதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் இங்கு வந்து தங்கி பல பயிற்சயாளர் பேட்ஜ்களை வாங்கிவந்தேன்.
என்னை கைது செய்த பொலிஸார், எனக்கு எந்த வாய்ப்புள்ள அளிக்காமல், Taser துப்பாக்கியால் தாக்கப்படுவேன் அனா மிரட்டி கைது செய்தனர். பின்னர் விசாரணையில், அரபு மொழியில் இருந்த ஒரு குற்ற ஒப்புதல் படிவத்தில் எண்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர். இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
[LRLNNW ]
ஆனால், இரு தினங்களுக்கு முன் இந்த வழக்கு துபாயில் விசாரணைக்கு வந்தபோது, பில்லிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 24 வயதே ஆகும் அவர் தனது 50-வது வயதில் தான் சிறையில் இருந்து வெளியே வரமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பில்லியின் சகோதரர் மற்றும்குடும்பத்தினர், வழக்கை மேல்முறையீடு செய்து அவரை நிரபராதி என நிரூபிக்க பணம் திரட்டி வருவதாக கூறியுள்ளனர்.
பில்லி தற்போது தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துவருவதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.