மகனை இழந்து வாடிய பிரித்தானிய தாய்: சுவிட்சர்லாந்தில் செயற்கை மரணத்தை தேடிக்கொண்டது ஏன்?
மகனை இழந்த சோகம் தாங்க முடியாமல் பிரித்தானியாவை சேர்ந்த தாய் ஒருவர் சுவிட்சர்லாந்தில் தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
மகனின் பிரிவை தாங்க முடியாத தாய்
பிரித்தானியாவை சேர்ந்த 56 வயது வெண்டி டஃபி(Wendy Duffy) என்ற பிரித்தானிய தாய் ஒருவர், தன்னுடைய மகனின் இழப்பை தாங்க முடியாமல் கடந்த வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் உள்ள கிளினிக்கில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகன் மார்கஸ் இழந்ததை அடுத்து, சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் உள்ள பெகாசோஸ்(Pegasos) மையத்தின் உதவியுடன் பிரிட்டிஷ் தாய் வெண்டி டஃபி தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
உயிரை மாய்த்துக் கொள்ள எடுத்த திட்டமிட்ட பயணம்
பராமரிப்பு பணியாளரான வெண்டி டஃபி தன்னுடைய வாழ்நாள் சேமிப்பான £10,000 (சுமார் 10 லட்சம் ரூபாயை) செலவு செய்து சுவிட்சர்லாந்தில் தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தனது இந்த முடிவை மகிழ்ச்சியான முடிவு என்றும், இதற்காக ஓராண்டு காலமாக திட்டமிட்டு வந்தாகவும் வெண்டி டஃபி தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரை துறப்பதற்கு முன்பு தன்னுடைய மகனின் டி-சர்ட்டை அணிந்திருந்த வெண்டி டஃபி, உயிரிழக்கும் தருவாயில் லேடி காகா மற்றும் புருனோ மார்ஸ் பாடிய “Die With A Smile” என்ற பாடலை ஒலிக்குமாறு Pegasos மைய ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Pegasos நிறுவனம் விளக்கம்
வெண்டி டஃபி-யின் விருப்பபடியே ஏப்ரல் 24ம் திகதி இந்த உயிர் துறக்கும் நடைமுறை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதாக பெகாசோஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரூடி ஹபெக்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் அவரது மனநலம், மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நீண்டகாலமாக உதவிபெறும் மரணங்களுக்கு(Assisted Dying) புகழ்பெற்ற இடமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |