சென்னையில் குடிபோதையில் ரகளை செய்த பிரித்தானிய கடற்படை வீரர்
இந்தியாவுக்கு பராமரிப்புப் பணிகளுக்காக வந்துள்ள பிரித்தானிய கடற்படை கப்பல் ஒன்றில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார்.
குடிபோதையில் ரகளை செய்த பிரித்தானிய கடற்படை வீரர்
பிரித்தானிய கடற்படைக் கப்பல் ஒன்று பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கப்பல் பணியாளர்கள் சிலர் மால் ஒன்றிற்குச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவரான J L Willis என்னும் கடற்படை வீரர், மாலுக்கு வெளியே நின்றவர்களிடம் குடிபோதையில் ரகளை செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவரைப் பிடித்து அவரது கைகளைக் கட்டி, மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்ல அங்கிருந்தவர்கள் முயன்றுள்ளார்கள்.
அப்போது, பொலிசார் Willisஐ அவர்களிடமிருந்து மீட்டுள்ளார்கள். அதற்குள் Willisஉடைய சகாக்கள் அங்கு வந்து சேர, நடந்தது குறித்து விசாரித்த பொலிசார், அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், அவரை அவரது சகாக்களுடன் அனுப்பிவைத்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |