விமான பயணத்தில் நடுவானில் உயிரிழந்த பிரித்தானியர்; அதே விமானத்தில் நடந்த இன்னொரு அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் இருந்து சைப்ரஸ் சென்றுகொண்டிருந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தனது கணவர் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்ட அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.
புதன்கிழமை இரவு பிரித்தானியாவில் இருந்து சைப்ரஸ் சென்ற விமானத்தில் 63 வயதான பிரித்தானிய நபர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் பயணத்தின்போது மயங்கி விழுந்ததையடுத்து, அந்த நபரின் மனைவி விமான பணியாளர் குழுவை அழைத்து தகவல் தெரிவித்தார். தனது கணவர் உயிரிழந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்ட அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.
அவர்கள் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளை எச்சரித்த பின்னர், விமானம் மத்திய தரைக்கடல் தீவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள பாஃபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இரவு 11 மணியளவில் தரையிறங்கியது.
தரையிறங்கியவுடன் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பாஃபோஸ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 'விமான பயணத்தின் போது அவர் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும், ஆனால் தற்போது எங்களால் அதிகம் சொல்ல முடியாது,' என்று பொலிஸார் ஊடகங்களில் தெரிவித்துவிட்டனர்.
இச்சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான அல்லது குற்றச் செயல்கள் எதுவும் இருப்பதாகக் கருதப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
அதே விமானத்தில்..
நேற்றிரவு (புதன்கிழமை) அதே விமான நிலையத்தில், கிளாஸ்கோவிலிருந்து பயணித்த 73 வயது பெண் ஒருவர் விமானத்தின் ஏணியில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
தலையில் காயம், கழுத்து எலும்பு முறிவு மற்றும் விலா எலும்புகள் உடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பயங்கரமான காயங்கள் இருந்தபோதிலும் அவருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.