மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ரஷ்யா உக்ரைன் போர், மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் பட்சத்தில், பிரித்தானிய பொதுமக்கள் ராணுவத்தில் சேரவேண்டியிருக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் போரிட்டவரும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மைக் மார்ட்டின் என்பவர், உக்ரைன் போர் இப்போதைக்கு முடிவுக்கு வருவதுபோல் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆக, பிரித்தானியாவும் ரஷ்யாவுடனான போரில் தலையிடவேண்டிவருமானால், பிரித்தானிய பொதுமக்கள் ராணுவத்தில் சேரவேண்டியிருக்கும், வேறு வழியில்லை என்று கூறியுள்ளார் மார்ட்டின்.
பிரித்தானிய ராணுவத்தில் கடற்படை, விமானப்படை உட்பட மொத்தம் 138,000 பேர்தான் உள்ளார்கள். அதில், 75,000 பேர் மட்டுமே தரைப்படையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |