மீண்டும் தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியா சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு நேற்று (சனிக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக்கும் தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
எனவே, பிரிட்டன் சுகாதார அமைப்பு கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.