பிரித்தானியர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி! வரும் 8-ஆம் திகதி தான் கடைசி நாள்
பிரித்தானியாவில் பயண விதிகள் கடந்த புதன் கிழமை மாற்றப்பட்ட நிலையில், வெளிநாட்டில் சிக்கியிருக்கும் பிரித்தானியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனாவின் மூன்றாவது மற்றும் நான்காவது அலையின் தாக்கம் உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பிரித்தானியாவில் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த புதன் கிழமை கொரோனாவிற்கான சிவப்பு பட்டியல் நாடுகளின் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
அதில் மெக்ஸிகோ, ஜார்ஜியா, பிரான்ஸ் யூனியன், மயோட் போன்றவை சிவப்பு பட்டியல் நாடுகளில் சேர்க்கப்பட்டது. சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து திரும்பினார், பிரித்தானியாவில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஹோட்டலில் தங்கவைக்கப்படுவர்.
இதற்கான தொகை அவர்களே செலுத்த வேண்டும். தற்போது திடீரென்று சிவப்பு பட்டியல் நாடுகளின் பட்டியலில் மெக்ஸிகோ உள்ளதால், அங்கிருக்கும் சுமார் 6000-க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
விடுமுறையை கழிக்க குடும்பத்தினருடன் வந்தால், இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருப்பது கடும் வேதனையாக இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும், மெக்ஸிகோவில் இருக்கும் பிரித்தானியாவை சேர்ந்த Claudia Rattray தன் இரண்டு மகள்களுடன் அங்கு விடுமுறையை கழித்து வருகிறார்.
இப்போது, மெக்ஸிகோவில் இருந்து பிரித்தானியாவிக்கு திரும்பினால், ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்காக 5000 பவுண்ட் வேண்டும். அதை தவிர்ப்பதற்காகவும், விதிகள் மாறும் வரை இங்கே தங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதே போன்று அங்கிருக்கும் பிரித்தானியர்கள் பலர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் இங்கிலாந்தின் போக்குவரத்து செயலாளர் ஆகியோர், பயண விதிகளில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.