தனியார் நிறுவனத்தால்...மாணவர்களை உளவு பார்க்கும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள்

Palestine Gaza Protest
By Arbin Apr 20, 2026 09:06 PM GMT
Report

பிரித்தானியாவில் பன்னிரண்டு பல்கலைக்கழகங்கள், மாணவர் போராட்டக்காரர்களையும் கல்வியாளர்களையும் உளவு பார்ப்பதற்காக, ஒரு தனியார் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தி வந்ததாக தகவல் கசிந்துள்ளது.

மாணவர்கள், கல்வியாளர்கள்

இதில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று முன்னெடுத்த விசாரணையில், இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.

தனியார் நிறுவனத்தால்...மாணவர்களை உளவு பார்க்கும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் | British Universities Spy On Students

ஹோரஸ் செக்யூரிட்டி கன்சல்டன்சி லிமிடெட் நிறுவனமானது மாணவர்களின் சமூக ஊடகப் பதிவுகளைத் துருவி ஆராய்ந்து, பிரித்தானியாவின் மிகவும் உயர்மட்ட கல்வி நிறுவனங்கள் சிலவற்றின் சார்பில், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த ரகசிய மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.

ஹோரஸ் நிறுவனத்திற்கு, 2022 முதல் பல்கலைக்கழகங்களிடமிருந்து குறைந்தபட்சம் 440,000 பவுண்டுகள் தொகை மணவர்களை உளவு பார்ப்பதற்காக செலுத்தப்பட்டுள்ளது.

கண்காணிக்கப்பட்டவர்களில், மான்செஸ்டர் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரை ஆற்ற அழைக்கப்பட்ட ஒரு பாலஸ்தீனிய கல்வியாளரும், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் காஸா ஆதரவு முனைவர் பட்ட மாணவரும் அடங்குவர்.

முற்றுகையைக் கடக்க முயற்சி... ஈரானியக் கப்பல் ஒன்றை அதிரடியாகக் கைப்பற்றிய அமெரிக்கா

முற்றுகையைக் கடக்க முயற்சி... ஈரானியக் கப்பல் ஒன்றை அதிரடியாகக் கைப்பற்றிய அமெரிக்கா

2024 அக்டோபரில், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், எந்த மாணவர் போராட்டக் குழுக்கள் குறித்து எச்சரிக்கைகளைப் பெற விரும்பியது என்ற பட்டியலை ஹோரஸ் நிறுவனத்திற்கு வழங்கியது.

அதில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் விலங்குரிமை ஆர்வலர்கள் அடங்கியிருந்தனர். மொத்தத்தில், 12 பல்கலைக்கழகங்கள் வளாகப் போராட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்க அந்த நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியுள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இம்பீரியல் கல்லூரி லண்டன், பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் (UCL), கிங்ஸ் கல்லூரி லண்டன் (KCL), ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம், லெய்செஸ்டர் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக, உளவு நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தியதாக ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனத்தால்...மாணவர்களை உளவு பார்க்கும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் | British Universities Spy On Students

மேலும், மாணவர்களின் தரவுகளை ஹோரஸுடன் பகிரவில்லை என்றும், தனிநபர்களைக் கண்காணிக்க அதற்கு அறிவுறுத்தவில்லை என்றும், சட்டப்பூர்வமான போராட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பாதுகாப்பான சூழலைப் பேணுவதே தங்களின் முன்னுரிமை என்றும் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

ஹோரஸ் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தியது மாணவர்களைக் கண்காணிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்று இம்பீரியல் காலேஜ் லண்டன் விளக்கமளித்துள்ளது.

ரஷ்யாவும் ஈரானும்

அதேபோல், தங்கள் கல்வி நிறுவனம் கருத்துச் சுதந்திரத்திற்கு உறுதியளிப்பதாகவும், தங்களது வளாகங்களுக்கு அருகாமையில் நடைபெறக்கூடிய போராட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட, தங்களது மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அபாயங்களைக் கண்டறிய ஹோரஸைப் பயன்படுத்துவதாகவும் கூறியது.

ஹோரஸ் நிறுவனம், 2006-ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் குழுவின் ஒரு திட்டமாக, முன்னாள் லெப்டினன்ட்-கர்னல் ஜொனாதன் வைட்லியால் நிறுவப்பட்டது.

தனியார் நிறுவனத்தால்...மாணவர்களை உளவு பார்க்கும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் | British Universities Spy On Students

2020-ல், கர்னல் டிம் காலின்ஸ் அதன் தாய் நிறுவனத்தின் இயக்குநரானார். சமீபத்திய ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் காஸா ஆதரவு ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கையும் அளவும் அதிகரித்து வருவதற்கு, ரஷ்யாவும் ஈரானும் இணைந்து திட்டமிட்ட ஒரு ஊடகப் பிரச்சாரமே காரணம் என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகிறார்.

பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பல்வேறு துறைகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக, அந்த நிறுவனத்திற்கு ஜனவரி 2022 முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 443,943 பவுண்டுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US