மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல்

By Balamanuvelan Jul 19, 2024 05:46 AM GMT
Report

மூட்டைப் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட பிரித்தானிய பெண்ணொருவர் எடுத்த நடவடிக்கை, விலைமதிப்பில்லாத ஒரு சிறுமியின் உயிரை பலிவாங்கிவிட்டது.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பெண்

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

கிழக்கு லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்துவந்துள்ளார் ஜெஸ்மின் அக்தர் (Jesmin Akter, 34) என்னும் பெண். அந்த கட்டிடத்தில் கடுமையான மூட்டைப் பூச்சி தொல்லை இருந்துள்ளது.

குடியிருப்பின் சொந்தக்காரர் ஆட்களை வைத்து மூட்டைப்பூச்சி மருந்து தெளிக்கவைத்திருக்கிறார். ஆனால், அந்த ஆட்கள் மூட்டைப்பூச்சி ஒழிப்பில் எந்த அனுபவமும் இல்லாதவர்கள்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

ஆகவே, தானே எதையாவது செய்தால்தான் இந்த பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என முடிவு செய்த ஜெஸ்மின், இத்தாலியிலிருந்து சட்டவிரோதமாக ரசாயனம் ஒன்றை வரவழைத்துள்ளார்.

அந்த ரசாயத்தை வீட்டில் தெளித்துவிட்டு, குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற ஜெஸ்மின், 24 மணி நேரத்துக்குப் பின்பே வீடு திரும்பியுள்ளார். ஆனால், அதற்குள் ஒரு பயங்கரம் அரங்கேறியிருந்தது.

பக்கத்து வீட்டில் நிகழ்ந்த பயங்கரம்

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

ஜெஸ்மின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வீட்டில், ஃபத்திஹா சப்ரின் (Fatiha Sabrin, 11) என்ற சிறுமி தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்துள்ளார். அன்று அவருக்கு பிறந்தநாள். ஆனால், அதிகாலை 4.00 மணிக்கே எழுந்த ஃபத்திஹா, தனக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டதாக தன் தாயிடம் கூறியிருக்கிறாள்.

உடனே அவர் அவசர உதவியை அழைக்க, அவர்கள் வயிற்றுப்போக்குக்கு மருந்து சாப்பிட ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

1.30 மணிக்கு ஃபத்திஹாவின் நிலைமை மோசமாக, மீண்டும் அவரது குடும்பத்தினர் அவசர உதவியை அழைக்க, அவர்கள் வந்தபோது ஃபத்திஹா மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்திருக்கிறாள்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஃபத்திஹா, மாலை 5.30 மணிக்கு உயிரிழந்துவிட்டாள்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

நடந்தது என்ன?

விடயம் என்னவென்றால், ஜெஸ்மின் வாங்கிய அந்த ரசாயனத்தை குறைந்த அளவிலேயே பயன்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், அவர் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமலே, மிக அதிகமாக பயன்படுத்த, அந்த ரசாயனம் காற்றிலுள்ள ஈரத்துடன் கலந்து, ரசாயனப் போரில் பயன்படுத்தப்படும் நச்சுப்புகை ஒன்றை உருவாக்கிவிட்டது.

அந்தப் புகை பக்கத்துவீட்டுக்கும் பரவ, பிறந்தநாள் கொண்டாடவேண்டிய ஃபத்திஹா, உயிரிழந்துவிட்டாள்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

ஜெஸ்மினுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, ஜெஸ்மினின் நன்னடத்தை குறித்து பலர் சாட்சியமளித்ததாலும், அவரையறியாமலே அவர் செய்த தவறால்தான் இந்த துயரம் நிகழ்ந்ததாலும், அவர் இப்போதைக்கு தண்டனை அனுபவிக்கத் தேவையில்லை என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஜெஸ்மின் மீண்டும் ஏதாகிலும் குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டுமே அவர் சிறை செல்லவேண்டிவரும் என்றும், என்றாலும், அவர் 150 மணி நேரம் ஊதியமின்றி உழைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US