Brexit கடவுச்சீட்டு விதியால் பிரித்தானியர்களுக்கு புதிய சிக்கல்!
அக்டோபர் மாதத்தில் வெளிநாடுகளுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும் பிரித்தானியர்களுக்கு பிரெக்சிட் கடவுச்சீட்டு விதியால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய பிரெக்ஸிட் விதிகளின் கீழ், உங்கள் கடவுச்சீட்டு கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். குறித்த விதியானது, வெளிநாடுகளில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்த காலகட்டத்தில், உங்களிடன் பிரித்தானிய கடவுச்சீட்டு இருக்குமானால், ஐரோப்பாவின் எந்த நாடுகளுக்கும் சென்று வரலாம், மட்டுமின்றி காலாவதியாகும் திகதி வரையில் தங்கிக்கொள்ளலாம் என இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார் நிபுணர் ஒருவர்.
ஐரோப்பிய உறுப்பு நாடுகள் அல்லாதவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்ட விதிகளை பின்பற்றி வந்தனர். தற்போது பிரித்தானியர்களான நாமும் அதே நிலையில் தான் உள்ளோம் என்கிறார் அவர்.
மேலும், நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற விரும்பும் திகதியிலிருந்து குறைந்தது மூன்று மாதங்களுக்க்கேனும் ஒரு கடவுச்சீட்டு செல்லுபடியாக வேண்டும் என்கிறார் Simon Calder.
2011ல் வழங்கப்பட்ட கடவுச்சீட்டானது 2022 வரை காலாவதியாகாது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான உறுப்பினர் அல்லாத கடவுச்சீட்டுகள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியானதாகக் கருதப்படுகிறது என்கிறார் Simon Calder.