காஸாவில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட மேலும் பல பிரித்தானியர்கள்: வெளிவரும் புதிய தகவல்
எகிப்து எல்லை ஊடாக ஏற்கனவே 100 பிரித்தானியர்கள் காஸாவில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தற்போது மேலும் பல பிரித்தானியர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் தரப்பு ஏமாற்றம்
88 பிரித்தானியர்கள் காஸாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக வெளியேறுவது தடுக்கப்பட்டதாக பிரித்தானிய வெளிவிவகார அதிகாரிகள் தரப்பு ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
@afp
188 பிரித்தானியர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், 88 பேர்கள் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய 100 பிரித்தானியர்கள் முந்தைய நாள் ரஃபா எல்லை வழியாக கடந்து சென்றுள்ளனர்.
இது ஒரு சிக்கலான விடயம் என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அதிகாரிகள், ரஃபா எல்லையை திறக்க எகிப்து அதிகாரிகளுக்கு அழுத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் படைகளை குறிவைத்து
இதனிடையே, காஸா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதனிடையே, தெற்கு இஸ்ரேலில் உள்ள Sderot அருகே ஹமாஸ் படைகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
@getty
இங்குள்ள 30,000 மக்களில் பெரும்பாலானோர் வெளியேறியிருந்தாலும், சிலர் மட்டுமே தங்கி வருவதாக கூறுகின்றனர். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த அதிரடி தாக்குதலில் Sderot பகுதியில் 40 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |