இரட்டிப்பான பாதிப்பு... 10 மில்லியன் மக்களுக்கு உடனே இரண்டாவது டோஸ் தடுப்பூசி: பிரித்தானியா நடவடிக்கை
இந்தியாவில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து பிரித்தானியாவில் தடுப்பூசி வழங்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைத்துள்ளனர். இந்தியாவில் உருமாற்றம் கண்டுள்ள கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர இந்த முடிவை எடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதிகளில் ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்கானதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு டோஸ்களையும் இன்னும் பெறாத முன்னுரிமை குழுக்களில் உள்ள 10 மில்லியன் பிரித்தானியர்கள் உடனடியாக தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற உள்ளனர்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற 12 வாரங்கள் இடைவெளி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 9 வாரங்களாக குறைத்துள்ளது.
இது 50 வயது கடந்த அனைவருக்கும் பொருந்தும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி 50 வயது கடந்த பிரித்தானியர்களுக்கு கொரோனாவில் இருந்து முழு பாதுகாப்பு அளிப்பதே அரசின் முன்னுரிமை எனவும் தெரிவித்துள்ளனர்.