பிரித்தானியாவில் நெருங்கும் குளிர்காலம்! இப்படி இருந்தால் வீட்டிலே இருங்கள்: வலியுறுத்தும் மருத்துவர்
பிரித்தானியாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீட்டிலே இருந்து கொண்டு குணமடையும் படி வலியுறுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், குளிர்காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த குளிர்காலத்தில் வைரஸ் தாக்குதல் எளிதாக இருக்கும் என்பதால், அரசு B என்ற திட்டத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
B திட்டம் என்பது, வீட்டிலிருந்து வேலை செய்வது , இரவு நேர கேளிக்கை விடுதி செல்பவர்களுக்கு கட்டாயம தடுப்பூசி சான்றிதழ், முகக்கவச அணிதல் போன்றவை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவின் Health Security Agency-யின் தலைமை நிர்வாகி மருத்துவர் Jenny Harries, இனி வரும் நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, வீட்டிலே இருந்து குணமடைந்து கொள்ளும் படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏனெனில் இதற்கு முன்பு இது போன்ற காய்ச்சல் பருவத்தில் நாம் வெளியில் சென்ற போது, பலருக்கு நோய் பரவியது. நாம் இப்போது குளிர்காலத்தை நெருங்கவுள்ளோம், இது போன்ற நேரத்தில் வீடு மற்றும் அலுவலகம் சார்ந்த பணிகளுக்காக அனைவரும் அலுவலங்களுக்கு சில நேரம் உடல்நிலை சரியில்லாதோடு சென்றால், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தகுந்த பரிசீலனை செய்து கொள்வது நல்லது. அப்படி தகுந்த பரிசீலனை இல்லாமல் அனைவரும் உடனடியாக வேலைக்குத் திரும்பினால், அவர்கள் முக கவசம் அணிந்திருந்தார்களா? தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டார்களா? என்பது தெரியாது.
இதனால், குறுகிய காலத்திற்குள் நாம் அதிகமான கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்வோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், நிச்சயமாக ஒரு விஷயம் சொல்லலாம், இப்போது பெரும்பாலான மக்கள் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இதனால் அது அவர்களுக்கு பாதுகாப்பு கவசம் போன்று, இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், தீவிரமாக பாதிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
கடந்த 7 நாட்களில் மட்டும் பிரித்தானியாவில் 333,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 934 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத் துறை புள்ளி விவரங்கள் கூறுகிறது.
மேலும், கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளிலே தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக, குறிப்பாக பிரித்தானியா போன்ற நாடுகளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.