புரூஸ் லீ: ஜாம்பவானின் மறக்க முடியாத வாழ்க்கையும் சோகமான மறைவும்
புரூஸ் லீ ஒரு சீன தற்காப்புக் கலைஞர். தற்காப்புக் கலையின் திறமைக்காகத் திரையுலகில் அளவில்லாமல் போற்றப்படும் ஆளுமைகள் குறைவு. அவ்வாறு உலகமே போற்றிய முதல் தலைமுறை ஜாம்பவான்களில் ஒருவர் தான் புரூஸ் லீ அல்லது லீ ஜுன்-ஃபேன் (Lee Jun-fa).
அவர் ஜீத் குனே டோ (Jeet Kune Do) என்ற கலப்பின தற்காப்புக் கலையை உருவாக்கியுள்ளார். இது பின்னர் அதிக கவனத்தைப் பெற்றது.
கிழக்கு-மேற்கு கலாச்சார பிளவை உடைத்து, எல்லா காலத்திலும் சிறந்த தற்காப்பு கலை நட்சத்திரங்களில் ஒருவராக அவர் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டார்.
சான் பிரான்சிஸ்கோவில் பிறந்து பிரிட்டிஷ் ஹொங்ஹொங்கில் வளர்ந்த லீ, ஹொங்ஹொங் திரைப்படத் துறையில் குழந்தை நடிகராக தனது சொந்த தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் அவை தற்காப்புக் கலை தொடர்பான படங்கள் அல்ல.
புரூஸ் லீ நவம்பர் 27, 1940 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஜாக்சன் தெரு மருத்துவமனையில் ஹொங்ஹொங் நாடக நிறுவனத்தில் நகைச்சுவை நடிகரான லீ ஹோய் சுன் மற்றும் சீன-ஜெர்மன் பாரம்பரியத்தைச் சேர்ந்த அவரது கத்தோலிக்க மனைவி கிரேஸ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். லீயின் தந்தை ஒரு நாடகத்தை வழங்குவதற்காக நியூயார்க்கில் இருந்தார்.
கிரேஸ் தனது முதல் பெயரை தனது மகன் ஜுன்ஃபானுக்கு வைத்தார். ஆனால் அந்த மருத்துவமனையின் மருத்துவர் மேரி குளோவர் அவரை புரூஸ் என்று அழைத்தார். பின்னர், அவர் லீ என்ற குடும்பப்பெயரை சேர்த்தபோது, அவர் புரூஸ் லீ ஆனார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, லீ தம்பதியினர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். சிறுவயதில், புரூஸ் 'சாய் ஃபங்' (லிட்டில் டிராகன்) என்றும் அழைக்கப்பட்டார். புரூஸ் லீயின் உடன்பிறந்தவர்கள் பீட்டர், ராபர்ட் மற்றும் ஆக்னஸ் ஃபோய்பீ.
புரூஸ் லீ, லீ சான்ஸ் கல்லூரி மற்றும் செயின்ட் பிரான்சிஸ் கல்லூரியில் கல்வி பயின்றார். சிறுவயதில் புரூஸ் லீ மெல்லிய மற்றும் பலவீனமான உடல் இயல்பு கொண்டவர்.
18 வயதில், ஒரு வகுப்பு தோழனால் கடுமையாக தாக்கப்பட்ட பிறகு, லீ தற்காப்புக்காக தற்காப்பு கலைகளை கற்க முடிவு செய்தார். படிப்பில் சுத்தப்பல், ஆனால் அடிதடி சண்டை அடிக்கடி தொடர்ந்தது.
தன் மகன் நாட்டிலேயே தங்கினால், வன்முறையில் ஈடுபட்டு சிறையில் அடைத்துவிடுவான் என்று அவரது தாய் கிரேஸ் பயந்தார். புரூஸை அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பரிடம் மேலதிக கல்விக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதனால் தனது தாயார் கொடுத்த நூறு டாலர்கள் மற்றும் 1958 ஹாங்காங் குத்துச்சண்டை சாம்பியனின் பதக்கத்துடன் அமெரிக்கா வந்தார் புருஸ்லீ.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். லீ 1961-ல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் லிண்டாவை சந்தித்தார். அவர்கள் காதலித்து ஆகஸ்ட் 1964-ல் திருமணம் செய்து கொண்டனர்.
டீன் ஏஜ் பருவத்தில் பல்வேறு கட்டங்களைக் கடந்த லீ, 1970-களில் படங்களில் தற்காப்புக் கலைகளை தீவிரமாகக் காட்டத் தொடங்கினார். இதனால், உலகம் முழுவதும் அவரது புகழ் வெகுவாக அதிகரித்தது.
தி பிக் பாஸ் (1971), ஃபிஸ்ட் ஆஃப் ப்யூரி (1972), கோல்டன் ஹார்வெஸ்டின் தி வே ஆஃப் தி டிராகன் (1972), என்டர் தி டிராகன் (1973) மற்றும் தி கேம் ஆஃப் டெத் (1978) போன்ற கிளாசிக் படங்களின் காலகட்டம். அதற்குள் புரூஸ் லீ ஈடு இணையற்றவராக இருந்தார். ஆனால் இந்த பயணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
பிரபலமான ஹீரோவாக உருவெடுத்த லீ, சொந்தமாக திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அடுத்த படம் 1973-ல் ராபர்ட் க்ளோஸ் இயக்கிய என்டர் தி டிராகன். கோல்டன் ஹார்வெஸ்ட்- இது வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். ஆனால் படம் வெளியான பிறகு அதுவரை உலக சினிமாவின் 4 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் சாதனைகளை முறியடித்து பெரும் லாபம் அடைந்தது. உலக சினிமாவின் முதல் ஆசிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார்.
தனது வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த அந்த மாபெரும் கலைஞன் தனது முப்பத்து மூன்று வயதில் உலகிலிருந்து விடைபெற்றான். இது முற்றிலும் எதிர்பாராத முடிவு.
மரணத்தின் முதல் அறிகுறி மே 10, 1973-ல் தோன்றியது. அன்றைய தினம் கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவில் "என்டர் ஃபார் தி டிராகன்" படத்தின் பதிவின் போது புரூஸ் லீ சரிந்து விழுந்தார். ஹொங்ஹ்ங்கில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு லீ தற்காலிகமாக குணமடைந்தார்.
அன்றைய தினம் தெரிந்த அறிகுறிகள் அவர் இறந்த நாள் அன்று காலையில் மீண்டும் மீண்டும் தோன்றின.
ஜூலை 20, 1973 அன்று, மதியம் 2:00 மணிக்கு, ரேமண்ட் சோவுடன் "கேம் ஆஃப் டெத்" தயாரிப்பைப் பற்றி விவாதித்த பிறகு, லீ மற்றும் சோ மாலை 4:00 மணியளவில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தாய்லாந்து நடிகை பெட்டி டிங் பெயினின் வீட்டிற்கு வந்தனர். மூவரும் ஸ்கிரிப்டைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது, ரேமண்ட் சோ அவர்கள் இரவு உணவிற்குச் சந்திக்கலாம் என்று கூறி விடைபெற்றார்.
சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு, லீ தனக்கு தலைவலி இருப்பதாகக் கூறி ஓய்வறைக்குச் சென்றார். பெட்டி அவருக்கு வலி நிவாரணியைக் கொடுத்தார், அதை அவர் வழக்கமாகப் பயன்படுத்தினார். சோ பெட்டியின் வீட்டிற்கு வந்தார், இரவு விருந்தில் லீயைக் காணவில்லை, அவர் அசையாமல் கிடப்பதைக் கண்டார். இருவரும் அவரை ஹாங்காங்கில் உள்ள புகழ்பெற்ற குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றாலும், அவரது மூளையில் ஒரு அசாதாரண வீக்கம் இருந்தது.
பெட்டி கொடுத்த வலிநிவாரணிகளில் சில ரசாயனங்கள் எதிர்பாராமல் லீயின் உடல் வினைபுரிந்தது என்பது ஆரம்பகட்ட முடிவாக இருந்தது. சிலர் இந்த வாதம் தவறானது என்றும், லீக்கு முன்னதாகவே அறிகுறிகள் தென்பட்டன என்றும் வாதிடுகின்றனர்.
புரூஸ் லீ இறந்த அன்று இரவு தொடங்கிய வதந்திகள் இன்னும் ஓயவில்லை. இந்த மரணம் நாளிதழ்கள் மற்றும் பிறருக்கு நீண்ட கால கொண்டாட்டநாக இருந்தது. பலர் சிறுசிறு தகவல்களை எடுத்துக்கொண்டு தங்களுக்குப் பிடித்ததை எழுதினார்கள். பலர் யதார்த்தத்துடன் சிறிய தொடர்பு கூட இல்லாமல்கண்டத்தையும் எழுதினார்கள்.
புரூஸ் லீ இறந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது நண்பரான பெட் டிங் வெளியிட்ட தகவல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 20, 19730-ல் லீ இந்த உலகத்தை விட்டுச் சென்றபோது, அவர் பல படங்களை விட்டுச் சென்றார். புகழ்பெற்ற தற்காப்புக் கலைஞரான புரூஸ் லீ அனைவருக்கும் தெரியும். ஆனால் லீயின் உள் தத்துவத்தின் அளவு இன்னும் சிலருக்குத் தெரியவில்லை. அவரது தத்துவக் கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளன.