ஏர் இந்தியா விமான விபத்து: பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை
இந்தியாவின் குஜராத்திலிருந்து இன்று மதியம் லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியது.
அந்த விமானத்தில் 169 இந்தியர்கள், ஒரு கனேடியர் மற்றும் 7 போர்ச்சுகல் நாட்டவர்களுடன் 53 பிரித்தானிய குடிமக்களும் பயணித்ததாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த துயர விபத்து தொடர்பில் பக்கிங்காம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை
அந்த அறிக்கையில், லண்டன் Gatwick விமான நிலையம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து மன்னர் சார்லசுக்கு உடனுக்குடன் தகவல்கள் அளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ஏற்கனவே சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பிரித்தானிய குடிமக்கள் பலருடன் லண்டன் புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளானதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி வருவது மிகவும் வேதனையளிக்கிறது.
நிலைமை குறித்து தொடர்ந்து எனக்கு தகவல்கள் அளிக்கப்பட்டுவருகின்றன. இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |