செய்த பணிக்கு ஊதியம் தராததால் பணியாளர் ஏற்படுத்திய சேதம்: வெளியான வீடியோ
ஜேர்மன் நகரம் ஒன்றில் செய்த பணிக்கு ஊதியம் தராததால் கட்டிய கட்டிடங்களை நாசம் செய்தார் பணியாளர் ஒருவர்.
தெற்கு ஜேர்மனியிலுள்ள Blumberg நகரில், தான் செய்த கட்டுமானப் பணிக்காக தனக்குத் தரவேண்டிய 425,000 பவுண்டுகள் ஊதியத்தைத் தராததால், பள்ளம் தோண்டும் இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கட்டிய வீடுகளின் பால்கனி மற்றும் கதவு ஜன்னல்களை இடித்துத் தள்ளினார் பணியாளர் ஒருவர்.
அதனால், 4.2 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. முதலில் அந்த இடத்திலிருந்து அவர் தப்பி ஓடினாலும், பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அந்த பணியாளர் கட்டிடங்களை சேதப்படுத்துவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
இதற்கிடையில், அவர் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியிருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் அந்த பகுதிக்குள் மக்கள் வராதபடி பொலிசார் தடைகளை ஏற்படுத்தினார்கள்.
ஆனால், அப்படி எதுவும் நடக்காததுடன், அதிர்ஷ்டவசமாக அந்த வீடுகளிலிருந்த யாருக்கும் காயங்கள் ஏற்படவும் இல்லை.