AI என கூறி மனிதர்களை வைத்து வேலை செய்தது அம்பலம் - மைக்ரோசாப்ட் முதலீடு செய்த நிறுவனத்தில் மோசடி
மனிதர்கள் செய்யும் சில வேலைகளை AI செய்ய முடியும் என்பதால் AI-யின் வளர்ச்சியால் மனிதர்கள் வேலையை இழப்பார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆனால் பிரபல நிறுவனம் ஒன்று, AI என கூறிக்கொண்டு, பின்னணியில் மனிதர்களை வைத்து வேலை செய்துள்ளது.
ரூ.3860 கோடி முதலீடு
கடந்த 2016 ஆம் ஆண்டு Sachin Dev Duggal என்பவர் Builder.ai எனப்படும் AI-யை உருவாக்கினார்.
வழக்கமாக ஒரு மொபைல் செயலியை உருவாக்க, டெவலப்பரை அதற்கான கோடிங்கை எழுத வேண்டும். ஆனால் இந்த ஐஏ மூலம், டெவலப்பரின் உதவியின்றி, AI நமது உள்ளீடுகளுக்கு ஏற்ப கோடிங் எழுதி செயலியை உருவாக்கி வழங்கிவிடும் என கூறப்பட்டது.
Builder.ai மூலம் மொபைல் செயலியை உருவாக்குவது, பீட்ஸா ஆர்டர் செய்வது போல் எளிதான ஒன்றாக அமையும் என அதன் நிறுவனர் தெரிவித்தார்.
இதனையடுத்து, மைக்ரோசாப்ட், கத்தார் முதலீட்டு ஆணையம் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த நிறுவனம் 450 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.3860 கோடி) முதலீட்டை ஈர்த்தது.
மேலும், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.5 பில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.12,868 கோடி) உயர்ந்தது.
பின்னணியில் ஊழியர்கள்
இந்நிலையில், இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியது போல் செயலிகளை AI மூலம் உருவாக்காமல், 700 ஊழியர்களை இந்தியாவில் பணியில் அமர்த்தி, செயலிகளை உருவாக்கி வந்துள்ளது. ஆனால், அதை AI உருவாக்கியதாக காட்டி, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது.
இதனை கண்டறிந்த கடன் வழங்கும் நிறுவனமான வயோலா கிரெடிட், 37 மில்லியன் டொலரை திரும்ப பெற்ற பின்னர் அந்த நிறுவனம் 2025 மே மாதம் பெரும் சரிவை சந்தித்தது.
இந்த நிறுவனம், தற்போது அமேசானுக்கு 85 மில்லியன் டொலரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 30 மில்லியன் டொலரும் கிளவுட் கம்ப்யூட்டிங் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. மேலும், 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |