பொலிசாரை கண்டதும் தப்பியோடிய கொள்ளையனுக்கு நேர்ந்த கதி... வினை விதைத்தவன் வினை அறுத்த கதை
சுவிட்சர்லாந்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிசாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளார்.
நேற்று காலை Ticino மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கொள்ளையடித்த ஒருவரை பொலிசார் துரத்தியுள்ளனர். பொலிசாருக்கு தப்பியோடிய அந்த 28 வயது நபர் Ticino நதியில் குதித்துள்ளார்.
பிறகு அவரை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. பொலிசார் சில மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடலை மீட்டனர்.
வினை அறுத்தவன் வினை அறுப்பான் என்ற கதையாக, குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த நபர் பொலிசாருக்கு தப்ப எண்ணி தண்ணீரில் குதிக்க, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்