சுவிஸில் பனிச்சரிவில் சிக்கிய நபர்... ஒரு வாரத்திற்கு பிறகு தெரியவந்த தகவல்
சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட நபர் ஒருவாரத்திற்கு பின்னர் சடலமாக மீட்பு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை Lac de Mauvoisin பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 36 வயதான வலாய்ஸ் குடியிருப்பாளர் மாயமானார்.
இதனையடுத்து அவசர உதவிக்குழுவினர் களமிறங்கியதுடன், தீவிர தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
மேலும், வானிலை மற்றும் தெரிவுநிலை சூழல்கள், அடுத்தடுத்து மேலும் பனிச்சரிவுகளின் ஆபத்து ஆகியவை தேடலை மிகவும் கடினமாக்கியது.
இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர், அந்த நபர் பனிக்குள் புதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.