பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்: தந்தை குறித்து மகன் கூறிய அந்த விடயம்
Andy Burnham's father dies less than two months after son becomes Prime Minister: ஆன்டி பர்னாம் பிரதமராகி இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரது தந்தை மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆன்டி பர்னாமின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.
பிரித்தானிய பிரதமரின் தந்தை மரணம்
இந்த செய்தி, அதை செய்தியாகப் படிப்பவர்களுக்கு, ஒரு நபரின் தந்தை மரணமடைந்ததைக் குறித்த ஒரு செய்தி போல் தோன்றலாம்.
ஆனால், ஆன்டி பர்னாமைப் பொருத்தவரை, அவரது வாழ்வில் அது ஒரு பெரிய இழப்பு.

தன் தந்தையை இழந்துவிட்டார் என்பதால் மட்டுமல்ல, ஆன்டி பர்னாம் இன்று பிரித்தானியாவின் பிரதமராக இருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்டவர் அவரது தந்தை என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயம்!
ராய் என அழைக்கப்படும் கென்னத் ராய் பர்னாம் (Kenneth Roy Burnham), ஒரு தொலைத்தொடர்பு பொறியாளராக இருந்தபோது கிளினிக் ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் ஆக இருந்த ஐலீனை சந்தித்துள்ளார்.
அதாவது, இருவரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தும், தங்கள் மூன்று மகன்களையும் நன்கு படிக்கவைத்துள்ளார்கள்.
பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்
தன் மகனான ஆன்டி பர்னாமை கேம்பிரிட்ஜ் பல்கலையில் இணைந்து படிக்க உற்சாகப்படுத்தியவரே ராய்தானாம். அது அவருக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும் என ராய் நம்பினாராம்.
அத்துடன், மகன் அரசியலில் ஈடுபட ராய் உற்சாகப்படுத்தியதும் ராய்தானாம்.
சோகம் என்னவென்றால், ராய் பின்னாட்களில் அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது, தன் மகன் அரசியலில் ஈடுபடவேண்டும் என ஆசைப்பட்டவர் ராய், ஆனால், தன் மகன் பிரித்தானிய பிரதமராகும்போது, அந்த விடயம் அவருக்குத் தெரியாது!
தான் பிரதமரானது தன் தந்தைக்குத் தெரியாது என சமீபத்தில் கூறி வருத்தப்பட்டிருந்தார் ஆன்டி பர்னாம்.
இந்நிலையில், முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ராய் பர்னாம், தனது 86ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.