இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! மூவர் பலி.. இருவர் கவலைக்கிடம்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பேருந்து விபத்து
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவின் கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலையில் வேகமாக வந்த இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மீட்புப்படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் பலியானதாகவும், 20 பேர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
@ANI
மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த பயணிகள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.