சீனாவின் அதிவேக சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி!
சீனாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு.
விபத்திற்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருவதாக பொலிஸார் அறிவிப்பு.
சீனாவின் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் படுகாயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Guizhou மாகாணத்தின் தலைநகரான Guiyang நகரின் தென்கிழக்கே உள்ள Sandu கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
Reuters
ஞாயிற்றுக்கிழமை தென்மேற்கு சீனாவின் அதிவேக சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்ட பேருந்தில் 47 பேர் பயணம் செய்த நிலையில், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: 30 ஆயிரம் டன் உக்ரைனிய தானியம்: துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய தகவல்
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததுடன், விபத்து குறித்த காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
AP