ஜேர்மனியில் திடீரென சாலையிலிருந்து வழுக்கிச் சென்ற பேருந்து: ஐந்து பேர் பலி, பலர் படுகாயம்
ஜேர்மன் நெடுஞ்சாலை ஒன்றில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
திடீரென சாலையிலிருந்து வழுக்கிச் சென்ற பேருந்து
நேற்று, Leipzig நகருக்கருகிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணித்துகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென சாலையிலிருந்து வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 4 பேர் முதல் 5 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பேருந்தில் பயணித்த பலர் படுகாயமடைந்தூள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அந்த சாலையில் வேறு வாகனங்கள் எதுவும் இல்லாத நிலையில், எதனால் இந்த விபத்து நேரிட்டது என்பது தெரியவில்லை.
பெர்லினிலிருந்து சூரிச் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த பேருந்தில் 53 பயணிகளும், இரண்டு சாரதிகளும் இருந்துள்ளார்கள். காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையும் தெரியவில்லை.
இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |