எனக்கு நயன்தாரா வேணும்..கனவை நிறைவேற்றுவாரா? அதிமுக எம்.பி சர்ச்சைப் பேச்சு
விழுப்புரத்தில் நடந்த NDA ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
சி.வி.சண்முகம்
அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் உட்பட கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் NDA ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆளும் கட்சியை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசினர். அவர் நடிகை நயன்தாராவை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையாகியுள்ளது.
அவர், "அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். இவரு அதவிட ஒரு படி மேலே போய்.,உங்கள் கனவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுங்கள் என்று என்கிறார். ஆமா, எனக்கு நயன்தாரா வேணும்..இவரு கனவை நிறைவேற்றுவாரா?
நயன்தாராவை எனக்கு கல்யாணம் பண்ணிவைன்னு கேட்பான். இவரு கனவை நிறைவேற்றுவாரா? அதுவும் எப்போது கேட்கிறார்..
ஆட்சி போயிடுச்சு.,அப்போ சொல்றாரு உங்கள் கனவை சொல்லுங்க; நான் நிறைவேற்றுறேன்னு. ஐந்து வருஷம் என்ன பண்ணாருன்னு தெரியல" என பேசியிருக்கிறார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |