கல்லூரிகளில் தீயாக பரவும் இஸ்ரேல் எதிர்ப்பு... பட்டமளிப்பு விழாவை ரத்து செய்த பிரபல பல்கலைக்கழகம்
அமெரிக்காவில் பல்வேறு கல்லூரி வளாகங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ள நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் அவர்களின் முதன்மையான பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கல்லூரி வளாகங்களில்
இஸ்ரேல்-காஸா போர் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் டசின் கணக்கான கல்லூரி வளாகங்களில் வெடித்துள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணமாக குறிப்பிட்டே லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் பட்டமளிப்பை ரத்து செய்துள்ளது. இதனிடையே, Emory பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 28 பேர் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரபு ரீதியாக 65,000 மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தங்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கும் முதன்மையான விழாவை தங்களால் இந்தமுறை நடத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
புதன்கிழமை கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 93 மாணவர்கள் கைதாகியுள்ளனர். மட்டுமின்றி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் இஸ்லாமிய மாணவி ஒருவரின் உரையை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் அறிவித்திருந்தனர்.
பொலிசாரால் கைது
இதனிடையே, எமோரி பல்கலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தாங்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளனர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் அதிகமான மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் நடந்த சில போராட்டங்கள் யூத எதிர்ப்பு என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல யூத மாணவர்கள் கொலம்பியாவிலும் பிற பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகக் கூறியுள்ளனர்.
இருப்பினும் பல எண்ணிக்கையிலான யூத மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |