நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுமா கற்றாழை?
இன்றைய காலத்தில் மக்களின் உயிரை பறிக்கும் கொடிய நோயாக நீரிழிவு நோய் உள்ளது. இதனை கட்டுப்படுத்தப்படாவிட்டால் அல்லது சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் மிகப்பெரிய உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
நீரிழிவு நோய்க்கான மருந்துகள் எளிதில் கிடைத்தாலும், உணவுப்பழக்கங்கள் மற்றும் இயற்கையான சில வழிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்த முயற்சித்தால் நல்லது. இதற்கு கற்றாழை மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது.
இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தின் பளபளப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது.
அந்தவகையில் தற்போது கற்றாழை எப்படி நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.
எவ்வாறு உதவுகின்றது?
- கற்றாழை ஜூஸ் மற்றும் ஜெல் ஆகியவை இயற்கையாகவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.
இதனை உணவாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், மருந்து மாத்திரைகள் அல்லது மற்ற ஜூஸ்களைக் காட்டிலும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் பார்க்க முடியும்.
-
மற்ற மருத்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் காட்டிலும் இதில் ஏற்படும் பக்க விளைவுகள் மிகக் குறைவு என்றும், அவை தாங்கக்கூடிய அளவில் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை நோயின் தொடக்க நிலையிலேயே கற்றாழையை எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
- அதேவேளையில், முன்கூட்டியே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கற்றாழை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு குறித்தும் மருத்துவரிடம் கேட்டுக்கொள்வது நல்லது.