தூக்கி ஏறியும் புளியங்கொட்டை வைத்து சருமத்தை பராமரிக்கலாம்! எப்படி தெரியுமா?
அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. இதை சரியான அளவில் நமக்கு கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற புளி.
புளியில் கால்சியம், வைட்டமின் "பி' நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணம், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது.
இது சுவைக்காக மட்டுமல்ல பல ஆரோக்கியநன்மைகளும் கொண்டது. அதுமட்டுமின்றி இதன் விதைகளும் சரும அழகிற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
புளி விதைகளைப் பொறுத்தவரை உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் முற்றிலும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது இதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- புளியங்கொட்டைகளை பொடி செய்து, அதனுடன் சுத்தமான தேன் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் செய்து சருமத்தில் அப்ளை செய்யுங்கள். வாரம் மூன்று நாட்கள் புளிப் பொடியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு கப் தேநீர் அருந்தி வரலாம். இப்படி செய்து வந்தால் உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை சரியாகும்.
- தினமும் காலையில் புளியங்கொட்டை தேநீர் அருந்துவதன் மூலம் உங்கள் சருமத்திற்கு நீரேற்றம் அளிக்கலாம். இது தோல் ஈரப்பதத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஹைலூரோனிக் அமிலமும் புளி விதையில் நிரம்பியுள்ளது.
- உங்கள் இளமையை தக்க வைத்து கொள்ள . தினமும் புளியங்கொட்டைகளைப் பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கவும். இதற்கு புளி விதை பவுடர், பப்பாளி பழ சாற்றை நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். இதேபோல வறண்ட சருமம் இருப்பவர்கள் பாலுடனும், எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் முல்தானி மிட்டி அல்லது கடலை மாவுடனும் சேர்த்து பயன்படுத்தலாம்.
- பருக்களை குணமாக்க புளியங்கொட்டையை வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து அந்த பொடியை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து அதை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் உங்கள் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.