கனடாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: அமைச்சர் விளக்கம்
16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை கனடா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
டிஜிட்டல் உலகில் இருந்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை காப்பாற்றும் நோக்கில் அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
அந்த வரிசையில், தற்போது 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை கனடா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கனடாவின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் வழங்கிய தகவலில், நாம் நம்முடைய பிள்ளைகளை கைவிடுகிறோம், அது போதும். இனி அடிப்படை பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தங்களை தாங்களே தாக்கிக் கொள்ளும் உள்ளடக்கங்கள், வன்முறை துண்டுதல், வெறுப்பை வளர்த்தல், அந்தரங்க படங்கள் ஆகிய தீங்கான 7 விஷயங்களை இந்த புதிய சட்டம் உள்ளடக்கியுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என நிருபிக்காத வரை 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடை தொடர்ந்து அமுல் இருக்கும் என்று அமைச்சர் மில்லர் தெரிவித்துள்ளார்.

எப்போது சட்டம் அமுலுக்கு வரும்?
இதற்காக டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம் ஒன்று கனடாவில் புதிதாக உருவாக்கப்படும்.
இந்த ஒழுங்குமுறை ஆணையம், சமூக ஊடகங்களுக்கான விலக்குகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான அளவுகோல்களை பின்னர் வெளியிடும்.
அதே சமயம் இந்த ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவ 18 மாதங்கள் வரை ஆகலாம் எனறும் அமைச்சர் மில்லர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |