மூன்றே மாதங்களில் 5,000 பேரை நாடுகடத்திய கனடா
கனடா அரசு, மூன்றே மாதங்களில் சுமார் 5,000 பேரை நாடுகடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றே மாதங்களில் 5,000 பேர்
கனடா அரசு, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் 5,260 பேரை நாடுகடத்தியுள்ளதாக கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த காலகட்டத்தில் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் இந்தியர்கள்தான் அதிகம். ஆம், 1,712 இந்தியர்கள் 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.

இந்தியர்களைத் தொடர்ந்து அதிக அளவில் நாடுகடத்தப்பட்டுள்ளவர்கள் மெக்சிகோ நாட்டவர்கள்.
இதே காலகட்டத்தில் மெக்சிகோ நாட்டவர்கள் 743 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். 2025ஆம் ஆண்டிலோ, 4,837 மெக்சிகோ நாட்டவர்களும், 3,779 இந்தியர்களும் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
கனடா 2025இல் நாடுகடத்துவதில் சாதனை படைத்துள்ளது எனலாம். ஆம், 2025ஆம் ஆண்டில், 23,160 பேர் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |