இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிற்கு கனடா அரசு வழங்கிய கௌரவம்
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிற்கு கனடா அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ்
2001 ஆம் ஆண்டு மின்னலே படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது இசை பயணத்தை தொடங்கியவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
25 ஆண்டுகளாக, பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பளர்களின் ஒருவராக வலம் வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கு, இன்றும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்நிலையில், கடந்த ஜூன் 28ஆம் திகதி கனடாவில் உள்ள டொரோண்டோ நகரில் Harris With Love என்ற பெயரில், ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
இதனை கௌரவப்படுத்தும் விதமாக, கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருந்து கௌரவம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பாராட்டில், ஒரு இசையமைப்பாளராகவும் இசைக்கலைஞராகவும் உங்கள் அசாதாரண திறமை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
உங்களின் மறக்க முடியாத மெல்லிசைகள் மற்றும் புதுமையான இசையமைப்புகள் மூலம், தமிழ் இசையின் உலகளாவிய வரம்பை உயர்த்தியுள்ளீர்கள், மேலும் புதிய தலைமுறை இசைகலைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளீர்கள்.
டொராண்டோவில் உங்கள் வருகை இசையின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு பெருமை மற்றும் ஒற்றுமைக்கான தருணமாகும்.
உங்கள் கலை மூலம் நீங்கள் கொண்டு வந்த மகிழ்ச்சி, உணர்ச்சி மற்றும் கலாச்சார செழுமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |