கனடாவில் புலம்பெயர்தல் கட்டணம் ஒன்று தொடர்பில் ஒரு முக்கிய அறிவிப்பு
கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கட்டணங்கள் அதிகரிப்பு
2026 ஏப்ரல் 30 நிலவரப்படி, எக்ஸ்பிரஸ் நுழைவு, மாகாண நாமினி திட்டங்கள் (PNPs) மற்றும் குடும்ப ஸ்பான்ஸர்ஷிப் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகள் மற்றும் திட்டங்களிலும் கனடாவின் நிரந்தர குடியிருப்பு (PR) செயலாக்கக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பிரிவுகளில், தோராயமாக 4 முதல் 5 சதவிகிதம் வரை கட்டணம் அதிகரித்துள்ளது.
குடும்ப ஸ்பான்ஸர்ஷிப் கட்டணம் மட்டும், அதிகப்படியாக 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நீங்கள் குடியிருப்பு அனுமதிக்கு ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்தாலும், The Right of Permanent Residence Fee (RPRF) கட்டணத்தை பிறகு செலுத்தலாம் என திட்டமிருப்பீர்கள் என்றால், இப்போது நீங்கள் புதிய, அதாவது, அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும்.
நீங்கள் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்பே ஒன்லைனில் விண்ணப்பமும் செய்து, உங்கள் விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அதை ஏற்றுக்கொண்டும்விட்டது என்றால், நீங்கள் கூடுதலாக எதுவும் செய்யத்தேவையில்லை. கட்டண உயர்வு குறித்த விவரங்களை இங்கு காணலாம்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |