குப்பைக்கூளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணின் உடல்: காதலர் கைது
இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் சில மாதங்களுக்கு முன் மாயமான நிலையில், அவரது உடல் குப்பை கொட்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
குப்பை கொட்டும் இடத்தில் பெண் உடல்
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள பர்லிங்டனில் வாழ்ந்துவந்த ஷாலினி சிங் (40) என்னும் இந்திய வம்சாவளியினரான பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திததி தன் தாயான அனிதா சிங்கிடம் மொபைலில் பேசியுள்ளார்.
அதற்குப் பிறகு அவர் மர்மமான முறையில் மாயமானார். CCTV காட்சிகள் அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்தன.
ஆகவே, அவர் வீட்டுக்குள் வைத்தே கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட, அவர் வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் பொலிசார் ஆய்வு மேற்கொள்ளத் துவங்கினார்கள்.
சந்தேகப்பட்டதுபோலவே, மே மாதம் 21ஆம் திகதி, அந்த குப்பை கொட்டும் இடத்தில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த உடல் பாகங்கள் DNA பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, அவை ஷாலினியுடையவை என்பது உறுதியானது.
அதைத் தொடர்ந்து ஷாலினியின் காதலரான ஜெஃப்ரி ஸ்மித் (Jeffery Smith, 42) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடயம் என்னவென்றால், ஸ்மித் மீது ஏற்கனவே பல தாக்குதல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மன நல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்மித்தை வெளியே விட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர்கள் மற்றும் நீதிமன்றம் எச்சரித்ததுபோலவே, அவர் மீண்டும் வன்முறையில் இறங்கியுள்ளார், ஒரு பெண்ணின் வாழ்வு அநியாயமாக பாதியிலேயே முடிவடைந்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |