பெண்ணொருவர் காணாமல் போனதாக புகார்: பொலிஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்ணொருவரைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் கடந்த மாதம் பொலிசில் புகாரளித்துள்ளார்.
பொலிஸ் விசாரணையில், அந்தப் பெண் இப்போது காணாமல் போகவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்துள்ளதுடன், ஒரு துயரச் செய்தியும் தெரியவந்துள்ளது!
பெண்ணொருவர் காணாமல் போனதாக புகார்
ஜூன் மாதம் 14ஆம் திகதி, தன் உறவினரான மேரி (Mary Gadbois) என்னும் பெண்ணைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் பொலிசில் புகாரளித்திருந்தார்.

பொலிசார் மேரியை தேடிவந்த நிலையில், உண்மையில் அவர் இப்போது காணாமல் போகவில்லை, அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்தது.
அதாவது, 2021ஆம் ஆண்டு மேரி Mission என்னுமிடத்தில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை, சோகம் என்னவென்றால், அவரை யாரும் தேடியதாகவும் தெரியவில்லை. சமீபத்தில்தான் அவரது உறவினர் ஒருவர் அவரைத் தொடர்பு கொள்ள இயலாததால், அவரைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.
பொலிசார் மேரியைத் தீவிரமாக தெடியும் அவரைக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், 2024ஆம் ஆண்டு Mission நகருக்கருகிலுள்ள வனப்பகுதி ஒன்றில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. அவை யாருடைய உடல் பாகங்கள் என தெரியாமலே இருந்துள்ளது.
இந்நிலையில், மேரியும் கடைசியாக Mission நகரில் வாழ்ந்துவந்தது தெரியவந்ததால், 2024ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் மேரியுடையவையாக இருக்குமோ என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து நீதிமன்ற அதிகாரிகள் உட்பட பலதரப்பினரும் மேற்கொண்ட ஆய்வில், அந்த உடல் பாகங்கள் மேரியுடையவைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |