குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்கு புகலிடம் வழங்கக்கூடாது: கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ள மசோதா
கடுமையான குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள், மற்றும் அது தொடர்பாக நீதித்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் கனேடிய குடிமக்கள் அல்லாதவர்கள் கனடாவில் புகலிடம் கோருவதைத் தடுக்கக் கோரி கனடா நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள மசோதா
சமீபத்தில், இந்தியர்கள் உட்பட பலர், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து உருவான சர்ச்சையின் தொடர்ச்சியாகவே கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மிச்செல் ரெம்பல் கார்னர் என்பவர் நேற்று இப்படியொரு மசோதாவை முன்வைத்துள்ளார்.

சர்ரே நகரம் போன்ற இடங்களில் மிரட்டி பணம் பறிக்கும் வழக்குகளில் அடையாளம் காணப்பட்டவர்கள், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதும் தங்களை அகதிகள் என கூறியுள்ளார்கள் என்கிறார் மிச்செல்.
அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 14 பேரின் நாடுகடத்தல்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆக, இதுபோன்ற பயங்கர குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது நீதித்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நபர்கள் புகலிடக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதைத் தடுக்கவும், கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கனேடியர்கள் அல்லாதவர்கள் நாடுகடத்தப்படுதிலிருந்து தப்பும் வகையில் அவர்களை கண்டிப்புடன் நடத்தாமல் இருக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரவும் அந்த மசோதா கோருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |