கனடாவில் பொலிசிடமிருந்து தப்ப பொலிஸ் காரில் ஏறிய நபர்: பொலிஸ் நடவடிக்கையில் பலி
கனடாவில், ஷாப்பிங் மால் ஒன்றிற்குள் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிய ஒருவரை பொலிஸ் துரத்த, பொலிஸ் நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பொலிசிடமிருந்து தப்ப பொலிஸ் காரில் ஏறிய நபர்
நேற்று மதியம் 1.12 மணியளவில், கனடாவின் வடக்கு வான்கூவரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் ஒருவர் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்த நபர் மாலிலிருந்து தப்பி, கார் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.
அவரது கார் பல வாகனங்கள் மீது மோத, எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் காரை நிறுத்திய அவர், அங்கு நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரில் ஏறியுள்ளார்.
பொலிசார் அவரை சுற்றி வளைக்க, அவர் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனே பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டு, கைவிலங்கிட்டு கைது செய்துள்ளார்கள்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |