கனடா பள்ளியில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு: பிரித்தானிய அரச குடும்பம் இரங்கல்
கனடாவில் பள்ளி ஒன்றில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து பிரித்தானிய அரச குடும்பம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கனடா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜ்(Tumbler Ridge) என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்தாரி பிறகு தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தாக்குதல்தாரி குறித்த விவரங்கள் எதையும் பொலிஸார் வெளியிடவில்லை.
துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பழுப்பு நிற தலைமுடி கொண்ட பெண் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரித்தானிய மன்னர் குடும்பம் இரங்கல்
இந்நிலையில் கனடா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலை கண்டித்து கனடாவின் அரசர் மூன்றாம் சார்லஸ் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், அர்த்தமற்ற வன்முறை தாக்குதலை கண்டு நானும், ராணி கமிலாவும் மிகுந்த மன வருத்தம் அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பள்ளியில் நடந்த தாக்குதலை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து, பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் தங்களது சமூக ஊடகம் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இருவரும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களின் மன உறுதி மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் தைரியமாக செயல்பட்டவர்களின் வீரத்தை பாராட்டியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |