RCB அணி கோப்பை வென்றால் ரூ.11 கோடி சம்பாதிக்க உள்ள கனடா பாடகர் - எப்படி தெரியுமா?
2025 ஐபிஎல் கோப்பையை RCB அணி வென்றால், கனடா பாடகருக்கு ரூ.11 கோடி கிடைக்க உள்ளது.
ஐபிஎல் இறுதிப்போட்டி
2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, இன்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது.
இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத நிலையில், எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், முன்னாள் RCB வீரர்களான கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் போட்டியை நேரில் காண இந்தியா வந்துள்ளனர்.
பந்தயம் வைத்துள்ள பாடகர்
இந்நிலையில், ஆர்சிபி அணி தான் கோப்பையை வெல்லும் என கனடாவை சேர்ந்த ராப் பாடகரான டிரேக்(Drake), ஸ்டேக் 7,50,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.6.4 கோடி) பந்தயம் கட்டியுள்ளார்.
விளையாட்டு போட்டிகளில் பணத்தை வைத்து பந்தயம் கட்ட அனுமதிக்கும் ஸ்டேக் (Stake) என்ற கிரிப்டோகரன்சி அடிப்படையிலான ஆன்லைன் பந்தய தளம் செயல்பட்டு வருகிறது.
இன்றைய இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால், பந்தய பணத்துடன் மற்றும் லாபம் சேர்த்து ரூ.11.11 கோடியை டிரேக்கிற்கு ஸ்டேக் தளம் வழங்கும். அதுவே ஆர்சிபி தோல்வியை தழுவினால், பந்தயம் கட்டிய ரூ.6.4 கோடி இழப்பார்.
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வெற்றி பெரும் என என பந்தயம் கட்டி, டிரேக் ரூ. 2.07 கோடி வெற்றி பெற்றார். மேலும், 2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெல்லும் என பந்தயம் வைத்து, ரூ.7.58 கோடி வென்றார்.
இந்த முறை ஆர்சிபி அணி வெற்றி பெரும் என பந்தயம் வைத்துள்ளதால், ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |