2050-க்குள் மின்சார கட்டமைப்பு திறனை இரட்டிப்பாக்க கனடா திட்டம்
கனடா அரசு, 2050-க்குள் நாட்டின் மின்சார கட்டமைப்பின் திறனை இரட்டிப்பாக உயர்த்தும் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது.
Powering Canada Strong எனப்படும் இந்த திட்டம், சுமார் 1 டிரில்லியன் கனடிய டொலர் முதலீட்டுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதோடு, 2050-க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதாகும்.
குறிப்பாக, AI தொழில்நுட்பம், டேட்டா சென்டர்கள், மின்சார வாகனங்கள் போன்ற துறைகளில் அதிகரிக்கும் தேவையை சமாளிக்க, புதிய உற்பத்தி நிலையங்கள், பரிமாற்ற மற்றும் சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன.

முக்கிய திட்டங்களில், ஒன்ராறியோவில் Darlington New Nuclear Project, பிரிட்டிஷ் கொலம்பியாவில் North Coast Transmission Line, நோவா ஸ்கோஷியாவில் Wind West Project, வடமேற்கு பிராந்தியத்தில் Taltson Hydro Expansion, நுனாவுட் பகுதியில் Iqaluit Hydro Project ஆகியவை அடங்கும்.
இந்த திட்டம் மூலம் 130,000-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 70 சதவீத கனடிய குடும்பங்களுக்கு மின்சார செலவு குறையும்.
ஆனால், ஆரம்ப கட்டத்தில் (அடுத்த 5-10 ஆண்டுகளில்) மின்சார கட்டணம் அதிகரிக்கலாம். நீண்ட காலத்தில், எரிபொருள் மற்றும் வெப்பமூட்டும் செலவுகள் குறைவதால், மொத்த எரிசக்தி செலவு குறையும்.
கனடா அரசு, இயற்கை எரிவாயுவை இடைக்காலத்தில் பயன்படுத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewables) மற்றும் அணு ஆற்றலின் இடைவெளிகளை சமநிலைப்படுத்தும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
இந்த திட்டம், கனடாவை உலகின் முன்னணி சுத்தமான ஆற்றல் நாடாக மாற்றும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#CanadaEnergy #PoweringCanadaStrong #CleanEnergy #ElectricityGrid #RenewableEnergy #NetZero2050 #CanadaNews #EnergyTransition