கனடாவில் ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி பெறச் சென்ற குழந்தை... சுகாதாரத்துறை ஊழியர் செய்த தவறு
கனடாவில், ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி பெறுவதற்காக 3 வயது குழந்தை ஒருத்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவளுக்கு பெரியவர்களுக்கு செலுத்தப்படும் பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட விடயம் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
மனித்தோபாவில் வாழும் Jenna Bardarson, தனது மூன்று வயது மகளான Daliக்கு ப்ளூ தடுப்பூசி பெறுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தடுப்பூசி போடப்பட்ட பிறகு, சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் Daliக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்க, அதிர்ச்சியடைந்துள்ளார் Daliயின் தாயாகிய Jenna.
உண்மையில் குழந்தைகளுக்கான பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி ஒன்று உள்ளது. அதாவது 12 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியில் மூன்றில் ஒரு பங்கு, ஒரு டோஸாக, 5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படலாம் என சமீபத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், Daliயைப் போல ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எந்த கொரோனா தடுப்பூசியும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
Jennaவுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், தாய்க்கும் குழந்தைக்கும் காய்ச்சலும் தலைவலியும் ஏற்பட்டதுடன், Dali வாந்தியும் எடுக்க, அவர் கவலைக்குள்ளாகியிருக்கிறார்.
ஏற்கனவே எல்லாரும் தடுப்பூசியின் பக்க விளைவுகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த தவறு என்னை கோபமடையச் செய்தது என்கிறார் Jenna.
ஒரு வாரம் ஆனபிறகும், எதனால் இந்த தவறு நிகழ்ந்தது என்று யாரும் பதிலளிக்கவில்லை என்கிறார் அவர்.
தனது அனுபவம் மற்றவர்களை தடுப்பூசி பெறுவதிலிருந்து தடுப்பதை தான் விரும்பவில்லை என்று கூறும் Jenna, பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர், மருத்துவமனை ஊழியர்கள் சரியான மருந்தைத்தான் கொடுக்கிறார்களா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்துகொள்ளுங்கள் என்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021