கனடாவில் ஒன்றாக நின்று கொண்டிருந்த 2 பெண்களுக்கு நடந்த கசப்பான சம்பவம்! சிசிடிவி புகைப்படம்
கனடாவில் தனியாக இருந்த இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் தொடர்பாக பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில் கடந்த வியாழன் அன்று இரவு 8 மணிக்கு Dundas Street West பகுதியில் இரண்டு பெண்கள் இருந்த நிலையில் அவர்களை ஒரு நபர் அணுகியிருக்கிறார்.
பின்னர் அப்பெண்களிடம் அத்துமீறிவிட்டு தப்பியோடியுள்ளான். தற்போது இதில் தொடர்புடைய சந்தேக நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம்.
30களில் உள்ள அவர் 6 அடி உயரம் கொண்டவராக இருப்பார். குறித்த நபர் தொடர்பில் எந்தவொரு தகவல் தெரிந்தாலும் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.
Toronto Police Service