கனடாவில் புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினர் வேன் மோதிக் கொல்லப்பட்ட வழக்கு: போதையில் தவறு நிகழ்ந்துவிட்டதாக வாதம்

Canada
By Balamanuvelan Nov 15, 2023 07:43 AM GMT
Report

கனடாவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மீதான வழக்கில், அவர் போதையில் இருந்ததால் தவறு நிகழ்ந்துவிட்டதாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தில் நான்கு பேர் பலி

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், 2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதீஹா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா அஃப்சால் (15), தம்பதியரின் 9 வயது மகன் மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் அஃப்சால் (74) ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, நத்தானியேல் (Nathaniel Veltman, 20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதினார்.

கனடாவில் புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினர் வேன் மோதிக் கொல்லப்பட்ட வழக்கு: போதையில் தவறு நிகழ்ந்துவிட்டதாக வாதம் | Canadian Man Killed Muslim Family Was On Drugs

GETTY IMAGES 

வேன் மோதியதில், சல்மான், அவரது மனைவி மதீஹா, தம்பதியரின் மகள் யும்னா மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

தம்பதியரின் மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், பின் உயிர் பிழைத்துக்கொண்டான். இந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த குடும்பம் ஆகும்.

கனடாவை அதிரவைத்த சம்பவம்

சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக நத்தானியேல் வேனை வேண்டுமென்றே அவர்கள் மீது மோதியதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.

இந்த கோரத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட தான் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்த கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்திருந்தார்.

கனடாவில் புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினர் வேன் மோதிக் கொல்லப்பட்ட வழக்கு: போதையில் தவறு நிகழ்ந்துவிட்டதாக வாதம் | Canadian Man Killed Muslim Family Was On Drugs

நத்தானியேல் மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் கனடா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்த, நாடு முழுவதும் மக்கள் பேரணிகளில் இறங்கினார்கள்.

குற்றம் செய்யவில்லை என மறுப்பு

இந்நிலையில், தான் குற்றம் செய்யவில்லை என நத்தானியேல் கூறிவருகிறார். அதற்கு ஆதரவாக, அவரது தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், அவருக்கு ஏற்கனவே பல மன நலப் பிரச்சினைகள் இருப்பதாகவும், சம்பவம் நடப்பதற்கு 40 மணி நேரம் முன்பு அவர் போதைப்பொருள் எடுத்திருந்ததாகவும், அதுவே இந்த அசம்பாவிதம் நிகழ காரணமாக அமைந்துவிட்டதாகவும் நடுவர் மன்றம் முன் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சம்பவம் நடந்த அன்று, நத்தானியேல் குண்டு துளைக்காத உடையும், ராணுவ ஹெல்மெட்டும் அணிந்து அந்த வேனை இயக்கியதைக் காட்டும் வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன.

கனடாவில் புலம்பெயர்ந்தோர் குடும்பத்தினர் வேன் மோதிக் கொல்லப்பட்ட வழக்கு: போதையில் தவறு நிகழ்ந்துவிட்டதாக வாதம் | Canadian Man Killed Muslim Family Was On Drugs

அத்துடன், சம்பவம் நடந்தபின், தான் ஒரு வெள்ளையின தேசியவாதி என்றும், இஸ்லாமியர்கள் என்பதாலேயே, தான் அவர்கள் மீது வேனை மோதியதாகவும் பொலிசாரிடமே கூறியிருந்தார் நத்தானியேல். அத்துடன், வேனை மோதிவிட்டு, அவசர உதவியை அழைத்து, நான் வேண்டுமென்றேதான் செய்தேன், வந்து என்னைக் கைது செய்யுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

வழக்கின் முக்கியத்துவம்

விடயம் என்னவென்றால், இந்த வழக்கு ஒரு சாதாரண விபத்து வழக்கு அல்ல. இது, கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு மட்டுமின்றி, நத்தானியேலின் செயல்கள் தீவிரவாதமாக கருதப்படுமா என்பதும் நடுவர் மன்றம் முடிவு செய்ய உள்ளது.

கனடாவில், இத்தகைய ஒரு வழக்கு நடுவர் மன்றம் முன் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US