வரலாறு படைப்பாரா கோலி? கடைசி டெஸ்டுக்கான இந்திய அணி பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்டுக்கான இந்திய அணி பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
2 போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப் டவுன் நகரில் டிசம்பர் 11ம் திகதி தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
3வது மற்றும் கடைசி டெஸ்டுக்கான இந்திய அணி பிளேயிங் லெவனில் விஹாரி மற்றும் சிராஜ்-க்கு பதிலாக கோலி, உமேஷ் யாதவ் இடம்பிடித்துள்ளனர்.
காயம் காரணமாக 2வது டெஸ்டிலிருந்து விலகிய கோலி, அணிக்கு திரும்பியுள்ளது இந்தியாவுக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் விபரம்:
- மயங்க் அகர்வால்
- கே.எல்.ராகுல்
- புஜாரா
- கோலி (கேப்டன்)
- ரஹானே
- ரிஷப் பண்ட்
- அஸ்வின்
- ஷர்துல் தாக்கூர்
- முகமது ஷமி
- பும்ரா
- உமேஷ் யாதவ்
தொடர் சமனிலையில் இருப்பதால், 3வது டெஸ்ட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
3வது டெஸ்டில் இந்தியா வெல்லும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற வரலாற்று பெருமை பெறும்.