ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்தப்பிய கேப்டன் வருண் சிங் மரணம்!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்தப்பிய கேப்டன் வருண் சிங் மரணமடைந்தார்.
கேப்டன் வருண் சிங் மரணமடைந்ததை இந்திய விமானப்படை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.
2021 டிசம்பர் 8ம் திகதி குன்னூரில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் பலியான நிலையில், தீ காயங்களுடன் குரூப் கேப்டன் வருண் சிங் உயிர்தப்பினார்.
விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட வருண் சிங்கிற்கு வெலிங்டன் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையிலிருந்து உயர் சிகிச்சைக்காக பெங்களூர் விமானப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த கேப்டன் வருண் சிங் டிசம்பர் 15ம் திகதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
IAF is deeply saddened to inform the passing away of braveheart Group Captain Varun Singh, who succumbed this morning to the injuries sustained in the helicopter accident on 08 Dec 21. IAF offers sincere condolences and stands firmly with the bereaved family.
— Indian Air Force (@IAF_MCC) December 15, 2021
கேப்டன் வருண் சிங் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.