மீட்க வந்ததற்கு நன்றி! ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்தப்பிய கேப்டன் வருண் சிங் பேசிய வார்த்தைகள்..
குன்னூரில் இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய ஒரே ஒரு நபரான கேப்டன் வருண் சிங், மீட்க வந்தவர்களிடம் என்ன பேசினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் இராணுவ மையத்தில் நடைபெறவிருந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க, இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினர் உட்பட 14 பேர், புதன்கிழமையன்று MI-17V5 ரக இராணுவ ஹெலிகாப்டரில் சென்றுகொண்டிருந்தனர்.
கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளத்திலிருந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்துக்கு சென்றுகொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர், மதியம் 12 மணியளவில் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது.
இந்த கோரமான விபத்தில், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்களில், பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், மீதம் 9 பேரின் உடல்களை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில், குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான காயங்களுடன், அவர் உயர் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்ள்ளார்.
இந்த நிலையில், மீட்புப்பணியின் போது சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மூலமாக, வருண் சிங் மீட்கப்பட்டபோது அவர் பேசிய விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல்களின்படி, சம்பவ இடத்தில் 3 பேர் உயிருடன் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் வருண் சிங். அவருக்கு தீக்காயங்கள் பலமாக இருந்தன, இருப்பினும் அவர் சற்றே சுயநினைவுடன் இருந்துள்ளார்.
அவரே தனது பெயரை 'வருண்' என்று சொல்லிப் பேசியுள்ளார். அவரது முகதிலும் உடலிலும் முட்கள் இருந்த நிலையில், அதை எடுத்துவிட முடியுமா என்று கேட்டுள்ளார். அவர்கள் முட்களை எடுத்துவிடடுள்ளனர்.
அதன்பிறகு, 'எங்களை மீட்க வந்தீர்க்களா?' என்று ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். 'ஆம், இன்னும் சில நிமிடங்களில் உங்களை பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்துவிடுவோம். தைரியமாக இருங்கள்' என்று மீட்பு பணியாளர்கள் கூறியுள்ளனர்.
அதற்கு அவர், 'Carry-on.. Thanks' என்று கூறியதாக தெரிவித்தனர்.