மின்னல் வேகத்தில் பயணித்த கார்.. பரிதாபமாக பலியான 6 உயிர்கள்
ராஜஸ்தானில் வேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்
கட்டிலில் அமர்ந்திருந்த காவலாளி பலியான நிலையில், ஒரு மாணவர் படுகாயமடைந்தார்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் வேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் மாணவர்கள் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. குறித்த கார் சதார் காவல் நிலையப் பகுதியில் நின்றுகொண்டிருந்த இரண்டு ட்ரக்குகள் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த காவலாளி உட்பட காரில் பயணித்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பான விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள் பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் விபத்தில் பலியான காவலாளியின் உறவினர்கள் காரை வேகமாக ஓட்டியவர் மீது புகார் அளித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.