பெண்ணை சுத்தியலால் கொலை செய்த நபர் மக்கள் கூட்டத்தில் வாகனத்தை செலுத்திய கொடூரம்
சம்பவப்பகுதியில் இருந்து மாயமான நபர் பெண் ஒருவரை சுத்தியலால் கொலை செய்துள்ளது அம்பலம்.
வாகனம் பாய்ந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்காவில் தீவிபத்தில் கொல்லப்பட்ட 10 பேர்களின் குடும்பத்தினருக்கு நிதி திரட்டும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சியின் நடுவே கார் ஒன்று பாய்ந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் மொத்தம் 17 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பெர்விக் என்ற பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
@6ABC
சம்பவப்பகுதியில் இருந்து மாயமான அந்த நபர் பெண் ஒருவரை சுத்தியலால் கொலை செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 6.15 மணியளவில் நடந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு போதைப்பொருள் துறை உணவகத்தின் அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சியின் போதே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
தொடர்புடைய சாரதி தற்போது பொலிஸ் காவலில் உள்ளார். விபத்திற்கு பின்னர் பெண் ஒருவரையும் அவர் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார் எனவும் பென்சில்வேனியா மாகாண பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் அந்த நபரை கைது செய்வதற்கு முன்பு பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆகஸ்டு 5ம் திகதி தீவிபத்தில் சிக்கி 10 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது கைதான நபருக்கு தொடர்பில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@6ABC
வாகனம் பாய்ந்த விவகாரத்தில் காயமடைந்துள்ள அனைவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விரிவான குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாகாண காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த 5ம் திகதி வீடு ஒன்று தீவிபத்தில் சிக்கியதில் 10 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதில் நால்வர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியிருந்தது. இதனையடுத்தே பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினருக்கு நிதி திரட்டும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.