வாயில் வைத்ததும் கரையும் கேரமல் பிரட் புடிங்.., எப்படி செய்வது?
புடிங் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு உணவாகும்.
உணவு சாப்பிட்ட பின் ஏதாவது இனிப்பாக சாப்பிட வேண்டுமென்று நினைத்தால் புடிங் செய்து சாப்பிடலாம்.
வீட்டில் உள்ள பிரட் வைத்து சுவையான ஜவ்வரிசி கேரமல் புடிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரை- 1 கப்
- பிரட்- 4
- முட்டை- 2
- வெண்ணிலா எசன்ஸ்- 1 ஸ்பூன்
- பால்- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து கேரமல் செய்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் பிரட், முட்டை, வெண்ணிலா எசன்ஸ், பால், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
அடுத்து வடிகட்டிய கலவையை கேரமல் மேல் சேர்த்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதன் மேல் சட்டத் வைத்து இந்த கலவையை வைக்கவும்.
இறுதியாக 20 நிமிடம் மூட்டி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான கேரமல் பிரட் புடிங் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |