தித்திக்கும் சுவையில் கேரட் அல்வா.., இலகுவாக செய்வது எப்படி?
அல்வா என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கேரட் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேரட்- 2
- நெய்- தேவையான அளவு
- சர்க்கரை- ½ கப்
- குங்குமப்பூ- 5 இதழ்
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- பால்- ½ லிட்டர்
- பாதாம்- 5 முந்திரி- 5
செய்முறை
முதலில் கேரட்டை நன்கு கழுவி தோல் சீவி துருவி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் நெய் சேர்த்து சூடானதும் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து அதில் பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
நன்கு கொதித்து கொஞ்சம் கெட்டியாகி வந்ததும் அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
இதற்கடுத்து இதில் அவ்வப்போது நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை கிளறவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கேரட் அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |