பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படும்- ஐகோர்ட் உத்தரவு
பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி பயணம்செய்தால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் கூறியதாவது..,
படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை.
பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம்.
இவ்வாறு பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.
சென்னையில் அரசு பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் பயணம் செய்வதை காண முடிகிறது.
இவ்வாறு படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
பள்ளியிலேயே மாணவர்களிடையே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா பழக்கங்கள் அதிகரித்து வருகிறது.
மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
பேருந்துகளின் உள்ளே போதிய இடம் இருந்தும், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தான் பயணம் செய்கின்றனர்.
மாணவர்கள் பேருந்துக்குள் இருந்து பயணிப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதை உறுதி செய்ய மதுரை கிளை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |