717 கோடி பணத்தை பறிமுதல் செய்த FBI..திரும்பி தராததால் வழக்கு தொடர்ந்த உரிமையாளர்கள்
அமெரிக்காவில் FBI அரசியலைப்பு உரிமைகளை துஷ்பிரயோகம் செய்ததாக Rolex, Cartier Bracelets உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
FBI சோதனை
கலிஃபோர்னியா மாகாணம் Beverly Hills நகரில் உள்ள US Private Vaultsயில், கடந்த 2021ஆம் ஆண்டில் FBI சோதனை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து சுமார் 86 மில்லியன் டொலர் ரொக்கம் (இந்திய மதிப்பில் 717 கோடி), விலையுயர்ந்த Rolex வாட்சுகள், Cartier பிரேஸ்லெட்ஸ் ஆகியவற்றை வைப்புப் பெட்டிகளில் இருந்து பறிமுதல் செய்தது.
குறித்த பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதால் நீதிபதி FBIக்கு இந்த சோதனைக்கான அனுமதியை வழங்கியதாக கூறப்பட்டது.
(Photo 13306534 © Davidgn | Dreamstime.com)
1,400 Safe deposit
நீதிமன்ற ஆவணங்களின்படி, 'US Private Vaultsயில் இருந்து 1,400 Safe deposit பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவையாவும் குற்றங்கள் புரிந்த நபர்களால் வழக்கமாக சேமிக்கப்பட்டவை' என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பில் US Private Vaults இறுதியாக பணமோசடி குற்றத்தை ஒப்புக் கொண்டது. ஆனால், அமெரிக்க சட்டதரணிகள் அலுவலகமானது வேறு எந்த கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் தாக்கல் செய்யவில்லை என்று கூறியது.
FBI மீது வழக்கு
இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் உரிமையாளர்கள் FBI மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். Deposit box வாடகைதாரர்கள் தங்கள் சொத்துக்களை எடுத்துக் கொண்டாலும், குற்றம் சாட்டப்படாதவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வகுப்பு நடவடிக்கை வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் நியாயமற்ற தேடுதல் மற்றும் பறிமுதல் ஆகியவற்றில் இருந்து அவர்களின் நான்காவது திருத்தத்தின் பாதுகாப்பையும், இழப்பீடு இல்லாமல் தனியார் சொத்துக்களை எடுப்பதில் இருந்து 5வது திருத்தத்தின் பாதுகாப்பையும் அரசாங்கம் மீறியுள்ளது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |